Oct 20, 2011

மரணமே மரணமே

மரங்களில்


பூக்களும் இலைகளும்

கனிகளும் தொங்க

பார்த்திருக்கிறேன்

கண்கள் நனைகிறதே

இதென்ன காட்சி...



இதயம் இணைந்தது

உடல்கள் இணைந்தது

உயிரும் இணைந்தது

மரணம்தான்

இதன் சாட்சி...



புள்ளும் புழுவும்

காதல் வளர்க்க

இடமிருக்கும் இப்

பரந்த உலகில்

உங்கள் காதல் வாழ

இடமில்லையா..?



மரணமே மரணமே

இந்த காதலை

மண்ணில் சாய்த்தாய்

உன்னில் ஈரமில்லையா...?



No comments: