நகரத்தின் மழைநாட்கள்....
****************************
நனைந்த சிறகுகள்
உலர்த்திக்கொள்ள
கிளைதேடும் பறவைகள்
வரவேற்கின்றன
நிமிர்ந்த
செல்போன் கோபுரங்கள்...
மரங்கள் இல்லாத
மரங்களில்
அசைந்தாடுகின்றன
இலைகளில்லாத
இலைகள்....
பூக்களில்லாத
பூக்களை
வாரிச் செல்கிறது
மழைநீர்
சேருமிடம் தெரியாமல்....
சளிபிடித்தால்
என்னசெய்வது
என்ற கவலையின்றி
மழையில் நனைகின்றன
குடைகள்...
துணிகளில்லாத
மொட்டைமாடி
கொடிகளில்
அணிவகுத்து உதிர்கின்றன
மழைத் துளிகள்...
நனையாத
ஓரிடம் தேடி
அலைகின்றன
கால்கள்...
மெதுவாய்
மேகம் கலைத்து
வெளிவந்த சூரியன்
போ.. போ
என்கிறது மழையை.....
****************************
நனைந்த சிறகுகள்
உலர்த்திக்கொள்ள
கிளைதேடும் பறவைகள்
வரவேற்கின்றன
நிமிர்ந்த
செல்போன் கோபுரங்கள்...
மரங்கள் இல்லாத
மரங்களில்
அசைந்தாடுகின்றன
இலைகளில்லாத
இலைகள்....
பூக்களில்லாத
பூக்களை
வாரிச் செல்கிறது
மழைநீர்
சேருமிடம் தெரியாமல்....
சளிபிடித்தால்
என்னசெய்வது
என்ற கவலையின்றி
மழையில் நனைகின்றன
குடைகள்...
துணிகளில்லாத
மொட்டைமாடி
கொடிகளில்
அணிவகுத்து உதிர்கின்றன
மழைத் துளிகள்...
நனையாத
ஓரிடம் தேடி
அலைகின்றன
கால்கள்...
மெதுவாய்
மேகம் கலைத்து
வெளிவந்த சூரியன்
போ.. போ
என்கிறது மழையை.....