Oct 22, 2011

பூ என்பர்


எளிதாய் முகர்ந்து

பின் கசக்கி எறிந்துவிடலாம்

என்று...



தேன் என்பர்

தேனீக்களை ஏமாற்றி

எளிதில் சுவைத்துவிடலாம்

என்று..



கொடி என்பர்

நேசமாய் படர்ந்து

பின் உறவை அறுத்துவிடலாம்

என்று..



கனி என்பர்

சுவைத்து முடித்து

மிச்சம் தூர வீசிவிடலாம்

என்று..



நிலவு என்பர்

ரசிக்கும் வரை

இரவில் வந்து போய்விடலாம்

என்று...



மான் என்பர்

எளிதில் வேட்டையாடி

பின் வீழ்த்திவிடலாம்

என்று...



மயில் என்பர்

அழகிய தோகை

உருவி பின் துரத்திவிடலாம்

என்று...



புகழ்ச்சியும் போதைதான்

என்பதை தெரிந்துகொள்

பெண்ணே

இகழ்ச்சியின் இலக்குகளை

எளிதில்

தகர்த்துவிடலாம் நீ

நாளை.....

No comments: