Nov 12, 2011

கருகிய காதல் சுவடுகள்...

மெழுகுவர்த்தி போன்றதுதான்


நம் காதல்

சுடுகிறது தவிக்கிறது

பின்

கண்ணீர் சிந்துகிறது

காற்றில்...


அணைத்துக்கொள்ளும்

உத்தேசம் இல்லை

உன்னிடம்

அணைந்துவிடும்

முடிவும் இல்லை

என்னிடம் ஆனாலும்

எரிந்து கொண்டுதானிருக்கிறது

இன்னும் மெழுகுவர்த்தி...



காதல் வலியில்

மெழுகின் கண்ணீர் மட்டும்

அறியப்படுகிறது

தீயின் வெப்பம் தாண்டி

தெரிவதில்லை

திரியின் கண்ணீர்துளிகள்...



முடிந்த காதலின்

அடையாளங்களாய்

காணக்கிடைக்கலாம்

மெழுகின் மிச்சங்கள்

நாளை...



எனைமட்டும்

திரியாய் மாற்றித்

தீய்த்துவிட்ட காரணம்

தெரியாது காற்றில்

புகையாய் அலைகிறது

என் ஆன்மா

தோழி...

No comments: