Nov 12, 2011

பிள்ளைநிலா...

வந்ததும்


வீட்டுக்கார கிழவி

என்னைத்தானே பார்ப்பாள்

என்ற அச்சத்தில்

கூடத்தின் சுவர்கள்

கலர்பென்சில்

கிறுக்கல்களுடன்...



இரண்டு சக்கரங்கள் இல்லாமல்

நான் எப்படி ஓடுவதாம்

என்ற கோபத்தில்

கார் பொம்மை..



பல்லில்லாத கிழவியைப்போல்

தொலைகாட்சியின்

ரிமோட் பொத்தான்களின்றி....



தும்பிக்கையில்லாத யானை

இறக்கை இல்லாத வாத்து

குடலில்லாத கரடி

என எத்தனையோ

ஜீவராசிகள் உனக்கு பயந்தபடி

நம் வீட்டில்..



ஓவியன் மருத்துவன்

பொறியாளன் சமையல்காரன்

சண்டைக்காரன்

என உன் அவதாரங்கள்

மாறிக்கொண்டிருக்கின்றன

அறிவிப்புகளின்றி

நொடிக்கொருமுறை...



நீ தூங்கியபின்

ஓய்வெடுத்து உனக்குமுன்

விழித்துக்கொள்கிறது தயாராய்

வீடு..

No comments: