அதை முந்திச்
சென்றுகொண்டே இருக்கின்றன
பல வாகனங்கள்....
உணர்ச்சியின்றி பார்த்து
பின் முகம் திருப்பியபடி
கடந்து போகின்றனர்
பாதசாரிகள்....
அது யாராய் இருக்கும்
ஆணா பெண்ணா
குழந்தையா...?
என்று மனதால்
நினைக்கக் கூட
நேரமின்றி நகரும்
மனிதர்களிடையே....
தனக்காக உதிர்ந்த
கண்ணீர் துளிகள்
எதுவென்று அறியாமல்
பூக்கள் உதிர்த்தபடி
செல்கிறது
நகரத்து மனிதனின்
இறுதி ஊர்வலம்...
-----------
எப்படியும் பறித்துவிடுவது
என்ற முடிவில்
எம்பிக் குதிக்கிறாய்...
காணாத அழகைக்
கண்ட வெட்கத்தில்
உதிர்ந்து
உன் காலடி விழுந்தன
பூக்கள்...
**************
நீயிட்ட வண்ணக்
கோலம் கலைத்தது
அந்த மழை
அதை நான் வெறுத்தேன்...
சிவப்பு மஞ்சள்
என உன் விரல்தொட்ட
வண்ணங்களை
என் வீட்டில் விட்டுப்போனது
மழைநீர்
மன்னிப்பாய் மழையே...
******************
சென்றுகொண்டே இருக்கின்றன
பல வாகனங்கள்....
உணர்ச்சியின்றி பார்த்து
பின் முகம் திருப்பியபடி
கடந்து போகின்றனர்
பாதசாரிகள்....
அது யாராய் இருக்கும்
ஆணா பெண்ணா
குழந்தையா...?
என்று மனதால்
நினைக்கக் கூட
நேரமின்றி நகரும்
மனிதர்களிடையே....
தனக்காக உதிர்ந்த
கண்ணீர் துளிகள்
எதுவென்று அறியாமல்
பூக்கள் உதிர்த்தபடி
செல்கிறது
நகரத்து மனிதனின்
இறுதி ஊர்வலம்...
-----------
எப்படியும் பறித்துவிடுவது
என்ற முடிவில்
எம்பிக் குதிக்கிறாய்...
காணாத அழகைக்
கண்ட வெட்கத்தில்
உதிர்ந்து
உன் காலடி விழுந்தன
பூக்கள்...
**************
நீயிட்ட வண்ணக்
கோலம் கலைத்தது
அந்த மழை
அதை நான் வெறுத்தேன்...
சிவப்பு மஞ்சள்
என உன் விரல்தொட்ட
வண்ணங்களை
என் வீட்டில் விட்டுப்போனது
மழைநீர்
மன்னிப்பாய் மழையே...
******************
No comments:
Post a Comment