Dec 4, 2011

தொலைந்த மனிதர்கள்....

தொலைந்த மனிதர்கள்....


*********************************

கலைந்த அலமாரியின்

அடுக்குகளில்

சிதறிக் கிடக்கின்றன

தொலைந்த மனிதர்களின்

நினைவுகள்....



எதையோ தேடும்

நிமிடங்களில்

எடுக்கப்பட்டு விடுகின்றன

எதிர்பாராமல்

யாரோ ஒருவரின்

நினைவுகள்....



பழைய நாட்குறிப்புகளும்

புகைப்படங்களும்

புரட்டப்படுகின்றன....

வெளிப்படுகிறது

யாரோ ஒருவருக்கான

புன்னகையும்

கண்ணீர்த் துளிகளும்....

No comments: