Aug 29, 2011

மாங்கோவா
திராட்சையா
ஆரஞ்சா எனப்பார்க்கும்
குழந்தையின் கண்கள்
ஐஸ்வண்டிக்காரனின் கைகளை...

ரெண்டா
அஞ்சா பத்தா
எனப்பார்க்கும்
ஐஸ்வண்டிக்காரனின் கண்கள்
குழந்தையின் கைகளை...

நூறு குழந்தையின் கைகள்
தேடியும்
நிறையாத மனதுடன் 
அலையும்
ஐஸ்வண்டிக்கரனின் கண்கள்...

ஒரே ஐஸ் குச்சியில்
நிறைந்துவிடும்
குழந்தையின்
வயிறும் மனதும் ....

No comments: