Aug 15, 2011

தனிமை

சிறு புன்னகை
ஒன்றை தருவதற்கு
ஒரு முகமோ...
சிணுங்கி பேசிச்செல்லும்
பெண்களோ
சிரித்து விளையாடும்
சிறார்களோ தென்படாத...
ஒரு பால்காரன்
பேப்பர்காரன் இவர்களின்
மணிச்சத்தம் கூட
கேட்காது உழலும்
ஒரு பகல் பொழுதின்
தனிமை
முடிவுக்கு வந்தது
என் ஜன்னல் வந்த
ஒரு குருவியால்.....

No comments: