Sep 5, 2011

தியாகவேணி

முன்னிரவில் பொழிந்த


பனித்துளிகளாய்

பரவிக் கிடக்கின்றேன்

புல்வெளியில்...

எடுத்துக்கொள்ள

வருகிறாய் நீ

எவரும் அறியாமல்

கடலின் கரை நழுவும்

காலைச் சூரியனாய்...

எனை அள்ளிக்

கொடுத்தபின்னும்

மீதமிருப்பேன் நான்

மறுநாள் காலையிலும்

உனக்காக

பனித்துளிகளாய்....

No comments: